Search This Blog

Showing posts with label Writernaveenkumar. Show all posts
Showing posts with label Writernaveenkumar. Show all posts

Monday, 29 June 2020

கட்டளை

பூக்களே இனி பூக்காதீர்கள்

அவள் துயில் நீங்கும் வரை! 

விடிந்ததும் வரும் திருடன் பனியே

இனி வராதே இது உன் பணியே! 

 

அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே

மேலும் உயர கட்டிட எழுப்பு, 

அவள் பாதம் அதில் பவனி வரும்

பட்டுப்புழுக்களை குடியமர்த்து! 

 

பசுவினை தினம் அழைத்து 

பாலாற்று மணலை பிழிந்தெடுத்து

பாலேடை அதில் கடைந்தெடுத்து

தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு! 

 

வானவில்லை வரவழைத்து

வெள்ளாவியில் வெளுத்தனுப்பு! 

கண்ணாடிகள் வெட்கப்படும்

அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு! 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Saturday, 27 June 2020

இரங்கல் எழுத

இத்தனைக் காலம் என்னுடனே

என் சட்டைப் பையும் உன்னுடனே!

வரிகள் ஆயிரம் வடித்தாயே

தாளில் நளின நடனம் புரிந்தாயே!

 

அடக்குமுறை பழகிய என் கைவிரலோ

உனக்கு துரோகம் எழுதியது வரலாறு!

எனக்கெதிராய் போராட மனமில்லையா

பொருமையாய் கிடந்தது ஏன் கூறு!

 

உன் ஆயுல நான் தினம் சுரண்டி

சுயநலமாய் இருந்தேனே

கழுத்தை இறுக்கப்பிடித்து எழுதியபோதும்

உயிர் மூச்சை எனக்காய் தந்தாயே

 

அடக்கம் செய்ய அலைகிறேன்

வெட்டியானே ஓடி வா

உனக்கு இரங்கல் எழுத அலைகிறேன்

எனக்கு இன்னொரு பேனா கிடைக்குமா?

Thursday, 14 December 2017

என் ஜனனம்

ஓடாத நதியில் மீனாய் பிறந்தேன்
கூடாத கடலில் தான் சேர்ந்தேன்
தேனமுதை தெகட்ட உட்கொண்டு உறவாடி
கிழிந்த வலையில் சிக்கிக்கொண்டேன்
இளந்தென்றலை என்னுள்ளே இழுத்துவிட்டு
தரை மேல் தாண்டவம் நான் புரிந்தேன்
தங்க அளந்த தராசில் விலையாகி
உடைந்த கத்தியில் சிறு துண்டானேன்
உலையில் நானும் பலவாய் நீந்தி
செதிலிழந்து செதில் செதிலாய்
சட்டிக்குள்ளே மிதந்தேன்
சாவை நானும் வென்றேன்
அகப்பையில் மெல்ல படியெடுத்து
அவள் உள்ளங்கையில் கடைந்தெடுத்து
எனக்கு ஜனனம் தருகிறாள்
அவள் உள்ளத்தில் மோட்சம் காண்கிறேன்

யார்?

என் விலாவில் தோன்றிய பெண்ணே
உன் கண்களை செய்தவன் யார்?
உன் கழுத்துக்கு நூறு பவுன் செய்கிறேன்
வார்ப்பில்லாமல் உன்னை வார்த்தவன் யார்?

உன் மேனிக்கு தோதாக பட்டை நூற்கிறேன்
பட்டைவிட லேசாக உன் தேகம் நூற்றவன் யார்?
பல நூற்றாண்டு காணாத நுன் சிலையே
உன்னை செதுக்கிய உளியவன் யார்?

குயிலை விட மென்மையான உன் குரலை
பாட வைத்த இசை ஞானியவன் யார்?
ஆடும் மயிலது உன் காலடியில் வீழ்ந்தனவே
உன்னை ஆட்டுவித்த அந்த கலைஞன் யார்?

செந்தமிழ் நீ பேச சங்க நூல்களில் எல்லாம்
முடிச்சுகள் அறுந்ததே  உன் ஆசான் யார்?
அமுதங்களின் தன்னிலை சுவை குறைகிறதே
உன் இதழ் சுவையினை கடைந்தவன் யார்?

உணர்ந்தேன்

ஓவியத்தில் வாசம் உணர்ந்தேன்
உன்னை வரையும் முன்னே
காவியத்தில் இடம் பிடித்தேன்
உன்னில் என்னை இழந்த பின்னே

என் தேவைகளும் தேவையில்லை
உன்னை நான் தொடர்ந்தால்-இனி
காலங்களும் என் கையில் இல்லை
உன் கரங்களை தொழுதால்

சேமிக்க ஆசையுண்டு
உன் நினைவுகளலானால் மட்டும்
யுகங்கள் பல கடந்தாலும்
சுகமாய் உன்னை தொடர்ந்திடுவேன்

நிஜத்தில் நீ வெறுத்தாலும்
நினைவில் தினம் அனைத்திடுவேன்
நெருப்பாக பார்த்தாலும்
வெந்தாலும் உன்னோடு வந்திடுவேன்

எனக்கு நீ

உன் வெட்கங்கள் எனக்கு கவிதை
உன் சிரிப்புகள் எனக்கு புரியாத புதிர்
உன் மௌனங்கள் எனக்கு விடுகதை
உன் பார்வை நடுநிலை

உன் குரல் எந்தன் சங்கீதம்
உன் பேச்சு மனதை வருடும் பாடல்கள்
உன் உருவம் சிற்பியின் உளிபடாத சிலை
உன் நடை பூமிக்கு புது மோட்சம்

உன் விரல் நகங்களோ தண்டனை கைதிகள்
உன் பாதங்களோ பூக்களுக்கு பஞ்சு மெத்தை
உன் ஆரவாரம் என்னுள் பெருந்திரள் கூட்டம்
உன் பனிவோ பரவசத்திற்கு முற்றுப்புள்ளி

உன் பயணங்களோ இயற்கைக்கு ஓர் சவால்
உன் குறும்புகளோ குறுந்தகட்டிலும் நிறுத்த முடியாதவை
உன் உளரள்களோ தாய்மொழிக்கு புதுக்கவிதை
உன் பெயரோ தினம் பாடவேண்டிய திருப்புகழ்
உன் படைப்பே நான் ரசிக்கும் விசித்திரம்.

காதல்

             காதல் கடிகார முள்ளைப் போல
காதலியின் பின்னால் ஓட துடிக்கும்
அவள் கரம் பிடிக்க தவம் கிடக்கும்
என்னவளை காண இமை துடிக்கும்

கண்டதும் காணாததை போல் நடிக்க பழக்கும்
பல் முளையா மழலையாய் பெயரை உச்சரிக்கும்
தவறு செய்தால் அவள் கண்கள உன்னை எச்சரிக்கும்

சொந்தங்களை விட்டு கால்கள் தனியே நிற்கும்
சிறு அடிகள் பல வைத்து கால்கள் நடை பழக்கும்
அவளைக் காண கண்கள் தினம் தவமிறுக்கும்
பல இரவுகள் போர் மூண்டு விட்டுகொடுக்கும்

காலையில் எழுந்ததும் கொஞ்ச துடிக்கும்
எல்லை மீறி அது கெஞ்ச துடிக்கும்
இதழ் முத்தம் பல கேட்டு போர்தொடுக்கும்
ஓர் முத்தம் வென்று சரித்திரம் படைக்கும்.

ஆசைகள்

ஆசைகள் பேயாய் அலையுதடி
என் பேராண்மை உன்னிடத்தில் தோற்குதடி
பிரபஞ்சம் பொறாமையில் பார்க்குதடி
நீ பொழியும் புன்னகையில் வேர்க்குதடி

உன் நினைவுகளை மணியாய் கோர்த்தேனடி
மனம் மடமைகள் செய்தும் மடயனாய் ரசிக்குதடி
தனிமையெல்லாம் வலியால் நோகுதடி
காற்று என்னோடு மனம் விட்டு பேசுதடி

வண்டெல்லாம் என்னோடு கைகோர்த்து நடக்குதடி
நிதானமாய் வரவேண்டி என்னை கெஞ்சுதடி
நரம்பிற்க்கும் குருதிக்கும் சண்டையடி
சமாதானம் சொன்னால் வன்முறையை கூட்டுதடி

சங்கீதமெல்லாம் இசையாய் உன்னை ஏற்குதடி
சங்க இலக்கியங்கள் உன் பெயரை காட்டுதடி
மே மாத சாரல் என் மேல் தெறிக்குதடி
விரல்கள் உனக்காய் மேலும் கவியை படைக்குமடி

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...