Search This Blog

Showing posts with label best tamil kavithai. Show all posts
Showing posts with label best tamil kavithai. Show all posts

Monday, 29 June 2020

கட்டளை

பூக்களே இனி பூக்காதீர்கள்

அவள் துயில் நீங்கும் வரை! 

விடிந்ததும் வரும் திருடன் பனியே

இனி வராதே இது உன் பணியே! 

 

அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே

மேலும் உயர கட்டிட எழுப்பு, 

அவள் பாதம் அதில் பவனி வரும்

பட்டுப்புழுக்களை குடியமர்த்து! 

 

பசுவினை தினம் அழைத்து 

பாலாற்று மணலை பிழிந்தெடுத்து

பாலேடை அதில் கடைந்தெடுத்து

தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு! 

 

வானவில்லை வரவழைத்து

வெள்ளாவியில் வெளுத்தனுப்பு! 

கண்ணாடிகள் வெட்கப்படும்

அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு! 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Saturday, 27 June 2020

ஒரு நிமிடம்

         ஒரு நிமிடம்

 

அன்பே என் கண்களை கவனி

கண்ணாடியின் தேவையிருக்காது

என் இதயத்துடிப்பை உற்று நோக்கு

நொடிக்கு நூறு பெயரில் உன்னை அழைக்கிறது

 

கையை காற்றில் நீட்டி கேளேன்

என் மூச்சுக்காற்றின் சூட்டை கூறும்

வெறுங்காலில் மண்ணில் கோலமிட்டு பாரேன்

என் நரம்பின் அதிர்வுகள் புரியும்

 

தபால் பெட்டியிடம் கேட்டுப்பார்

முத்திரைக்கு கண் மையை கடனாய் கேட்கும்

உன்னையெழுதிய இலக்கண தாள்களை புரட்டிப்பார்

என்னி முடிக்க காற்றின் ஆயுள் குறைந்துபோகும்

 

என் கோரிக்கைகளை மனுக்களாய் எழுதி

ஆகாயத்தை உரையாய் மடித்தேன்

விடியும் முன்னமே படித்துவிடு

வெண் திருடன் வருவான் படித்ததும் எரித்துவிடு

 

 

கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..

 

 

பெண்

                 பெண்

 

காற்றையே மூச்சில் கைது செய்வாள்

ஆணில் அமைதியாய் துயில்கொள்வாள்

படிக்க முடியா காவியமாவள்

கண்ணிலே கதை சொல்வாள்

 

புதிருக்கு முன்னே நின்று, புன்னகையில்

புதிர் போடும் முதிர்ந்த கன்னியவள்

மார்புச் சூட்டிலே ஆணை துடிக்க துடிக்க

சித்திரவதை செய்யும் புனித அரக்கியவள்

 

ஆநிரைகள் ஆயிரம் வந்தாலும்

ஓர் ஆணின் நிரை காணும் நெஞ்சமவள்

கர்வத்தை கட்டிலில் கழட்டிவிட்டு,ஆணை

நிராயுதமாய் வெல்லும் வித்தைக்காரியவள்

 

கட்டில், தொட்டில் பிள்ளைகளை

தினம் தாலாட்டி பாடும் தாயவள்

மகளாய் மண்ணில் மீண்டும் பிறந்து

தந்தைக்கு இரண்டாம் தாயான மழலையவள்

 

 

கோ.நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர்

 

 

எருக்கம் காதல்

     எருக்கம் காதல்

 

முத்துக்களாய் மூடி வைத்து

முதிர்ந்த பித்துக்களால் உடைத்த என்னை

காற்றாய் கரம் கொண்டு

இமயத்தை காண வைத்தது காதல்

 

கால் நோக திரிய வேண்டாம்

கனல் நீர் மேலே புரளவேண்டாம்

தரை மீது உன் தலைமுறையிருக்கு

தயங்காமல் மண் நெஞ்சில் மூடியது காதல்

 

மண்ணில் மறைந்த என்னை காணாது

விண்ணில் வீட்டை விட்டு வெளிவந்து

உள்ளே உறைந்த ஊமையென்னை

மெல்ல முளைய வைத்தது காதல்

 

ஆளாகி நின்றபோது

சொந்தங்கள் எல்லாம் தனிமரமாக

தனியாய் பூத்த என் சோலையிலே

வண்டொன்றின் ரீங்கார தாலாட்டு காதல் 

Thursday, 14 December 2017

எனக்கு நீ

உன் வெட்கங்கள் எனக்கு கவிதை
உன் சிரிப்புகள் எனக்கு புரியாத புதிர்
உன் மௌனங்கள் எனக்கு விடுகதை
உன் பார்வை நடுநிலை

உன் குரல் எந்தன் சங்கீதம்
உன் பேச்சு மனதை வருடும் பாடல்கள்
உன் உருவம் சிற்பியின் உளிபடாத சிலை
உன் நடை பூமிக்கு புது மோட்சம்

உன் விரல் நகங்களோ தண்டனை கைதிகள்
உன் பாதங்களோ பூக்களுக்கு பஞ்சு மெத்தை
உன் ஆரவாரம் என்னுள் பெருந்திரள் கூட்டம்
உன் பனிவோ பரவசத்திற்கு முற்றுப்புள்ளி

உன் பயணங்களோ இயற்கைக்கு ஓர் சவால்
உன் குறும்புகளோ குறுந்தகட்டிலும் நிறுத்த முடியாதவை
உன் உளரள்களோ தாய்மொழிக்கு புதுக்கவிதை
உன் பெயரோ தினம் பாடவேண்டிய திருப்புகழ்
உன் படைப்பே நான் ரசிக்கும் விசித்திரம்.

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...