Search This Blog

Showing posts with label best tamil lyrics. Show all posts
Showing posts with label best tamil lyrics. Show all posts

Wednesday, 1 July 2020

கைதி

சிறையில்லா கைதி நான்

அவள் கண்களாலே! 

சிறகிருந்தும் பறக்கவில்லை

ஆயுள் கைதியானேன்! 

 

என் குற்றம் காதலது

ஒருதலையாய் மட்டும்! 

அதற்கான தண்டனை தான்

ஒருவேளை உணவு மட்டும்! 

 

கல்லுடைக்கும் வேலையில்லை

காற்றில் கைநீட்டி திரிகிறேன்! 

தினம் அவள் வருகையை மட்டும்

கம்பியை போல என்னுகிறேன்! 

 

அவள் நினைவை மின் வேலியாய்

என்னை சுற்றிப் போட்டு வைத்தாள்! 

வேறு யாரும் வாராமல், உள்ளே

என்னை தனியாக பூட்டி வைத்தாள்! 

 

<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Monday, 29 June 2020

கட்டளை

பூக்களே இனி பூக்காதீர்கள்

அவள் துயில் நீங்கும் வரை! 

விடிந்ததும் வரும் திருடன் பனியே

இனி வராதே இது உன் பணியே! 

 

அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே

மேலும் உயர கட்டிட எழுப்பு, 

அவள் பாதம் அதில் பவனி வரும்

பட்டுப்புழுக்களை குடியமர்த்து! 

 

பசுவினை தினம் அழைத்து 

பாலாற்று மணலை பிழிந்தெடுத்து

பாலேடை அதில் கடைந்தெடுத்து

தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு! 

 

வானவில்லை வரவழைத்து

வெள்ளாவியில் வெளுத்தனுப்பு! 

கண்ணாடிகள் வெட்கப்படும்

அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு! 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Thursday, 14 December 2017

வேண்டும்

உன் கைபிடித்து நெடுந்தூரம் நடக்க வேண்டும்
நடக்கும் நேரமெல்லாம் நிதானமாய் கடக்க வேண்டும்
மேகம் நமக்கு குடைபிடிக்க வேண்டும்
இடி மின்னல்கள் இசைக் கச்சேரி நடத்த வேண்டும்

வானவில் வண்ணங்களை நம் மீது தூவ வேண்டும்
நிலா உன்னழகில் மண்ணில் வீழ்ந்து உடைய வேண்டும்
நட்சத்திரம் உன் பெண்மையில் ஒளிர வேண்டும்
சூரியன் உன் மென்மையை கண்டு குளிர வேண்டும்

காலையிலே பூத்த பூக்கள் நீயின்றி வாட வேண்டும்
கிரகங்கள் கிருக்குபிடித்து திசையொன்றாய் போக வேண்டும்
வின்னுக்கும் மண்ணுக்கும் போர் அறிவிக்க வேண்டும்
வில் அம்பு போதாமல் போர் முடிக்க வேண்டும்

உன் உள்ளங்கையில் சூரியனை மூட வேண்டும்
நீ கால் வைக்க பனி பூக்களாய் பூக்க வேண்டும்
அந்த பனிமேலே உன் கால்கள் பட வேண்டும்
உன் பாத சூட்டில் பனியோடு நானும் உருக வேண்டும்

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...