பூக்களே இனி பூக்காதீர்கள்
அவள் துயில் நீங்கும் வரை!
விடிந்ததும் வரும் திருடன் பனியே
இனி வராதே இது உன் பணியே!
அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே
மேலும் உயர கட்டிட எழுப்பு,
அவள் பாதம் அதில் பவனி வரும்
பட்டுப்புழுக்களை குடியமர்த்து!
பசுவினை தினம் அழைத்து
பாலாற்று மணலை பிழிந்தெடுத்து
பாலேடை அதில் கடைந்தெடுத்து
தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு!
வானவில்லை வரவழைத்து
வெள்ளாவியில் வெளுத்தனுப்பு!
கண்ணாடிகள் வெட்கப்படும்
அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு!
<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
No comments:
Post a Comment