ஓவியத்தில் வாசம் உணர்ந்தேன்
உன்னை வரையும் முன்னே
காவியத்தில் இடம் பிடித்தேன்
உன்னில் என்னை இழந்த பின்னே
என் தேவைகளும் தேவையில்லை
உன்னை நான் தொடர்ந்தால்-இனி
காலங்களும் என் கையில் இல்லை
உன் கரங்களை தொழுதால்
சேமிக்க ஆசையுண்டு
உன் நினைவுகளலானால் மட்டும்
யுகங்கள் பல கடந்தாலும்
சுகமாய் உன்னை தொடர்ந்திடுவேன்
நிஜத்தில் நீ வெறுத்தாலும்
நினைவில் தினம் அனைத்திடுவேன்
நெருப்பாக பார்த்தாலும்
வெந்தாலும் உன்னோடு வந்திடுவேன்
No comments:
Post a Comment