Search This Blog

Showing posts with label    என் செய்வேன். Show all posts
Showing posts with label    என் செய்வேன். Show all posts

Thursday, 14 December 2017

என் செய்வேன்

மீன்கள் உன் கண்ணை கடனாய் கேட்கும்!
மான்கள் புருவத்தினால் பலியாக துடிக்கும்!
கருவிழியைக் காண அமாவாசை அடம்பிடிக்கும்!
வெண்திரையை காண பெளர்ணமி படம் பிடிக்கும்!

இதழ் மூடி சிரித்த நேரம் கண்ணக்குழியில் வீழ்ந்தேன்!
மெளனமான நேரம் மண்ணுக்கடியில் புதைந்தேன்!
இடையின் மடிப்பைக் கண்டு பட்டாடை தான் பனிந்து
உன் கை விரலின் தண்டனையை ஏற்றது

நீ சிந்திய புன்னகையில் பூக்களாய் பூத்துப்போனேன்!
பூக்காத காகிதப்பூ என்னை பூவென ஏற்றது!
நீ பேசிய வார்த்தைகள் ஒன்றாய் திரண்டு
புது மொழியென புத்தகம் வரைந்தது!

உன்னை புகழ்ந்து பாட்டெடுக்க
என் நாவை பலவாய் நான் கொய்தேன்!
சோகத்தில் உன்னை போற்றிடுவேன் சொர்கத்தின் வாசல் நீ!
சொப்பனத்தில் ஆடிவந்து சுகமாய் என்னை மீட்டெடு நீ!

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...