Search This Blog

Thursday, 14 December 2017

எனக்கு நீ

உன் வெட்கங்கள் எனக்கு கவிதை
உன் சிரிப்புகள் எனக்கு புரியாத புதிர்
உன் மௌனங்கள் எனக்கு விடுகதை
உன் பார்வை நடுநிலை

உன் குரல் எந்தன் சங்கீதம்
உன் பேச்சு மனதை வருடும் பாடல்கள்
உன் உருவம் சிற்பியின் உளிபடாத சிலை
உன் நடை பூமிக்கு புது மோட்சம்

உன் விரல் நகங்களோ தண்டனை கைதிகள்
உன் பாதங்களோ பூக்களுக்கு பஞ்சு மெத்தை
உன் ஆரவாரம் என்னுள் பெருந்திரள் கூட்டம்
உன் பனிவோ பரவசத்திற்கு முற்றுப்புள்ளி

உன் பயணங்களோ இயற்கைக்கு ஓர் சவால்
உன் குறும்புகளோ குறுந்தகட்டிலும் நிறுத்த முடியாதவை
உன் உளரள்களோ தாய்மொழிக்கு புதுக்கவிதை
உன் பெயரோ தினம் பாடவேண்டிய திருப்புகழ்
உன் படைப்பே நான் ரசிக்கும் விசித்திரம்.

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...