Search This Blog

Thursday, 14 December 2017

காதல்

             காதல் கடிகார முள்ளைப் போல
காதலியின் பின்னால் ஓட துடிக்கும்
அவள் கரம் பிடிக்க தவம் கிடக்கும்
என்னவளை காண இமை துடிக்கும்

கண்டதும் காணாததை போல் நடிக்க பழக்கும்
பல் முளையா மழலையாய் பெயரை உச்சரிக்கும்
தவறு செய்தால் அவள் கண்கள உன்னை எச்சரிக்கும்

சொந்தங்களை விட்டு கால்கள் தனியே நிற்கும்
சிறு அடிகள் பல வைத்து கால்கள் நடை பழக்கும்
அவளைக் காண கண்கள் தினம் தவமிறுக்கும்
பல இரவுகள் போர் மூண்டு விட்டுகொடுக்கும்

காலையில் எழுந்ததும் கொஞ்ச துடிக்கும்
எல்லை மீறி அது கெஞ்ச துடிக்கும்
இதழ் முத்தம் பல கேட்டு போர்தொடுக்கும்
ஓர் முத்தம் வென்று சரித்திரம் படைக்கும்.

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...