இத்தனைக் காலம் என்னுடனே
என் சட்டைப் பையும் உன்னுடனே!
வரிகள் ஆயிரம் வடித்தாயே
தாளில் நளின நடனம் புரிந்தாயே!
அடக்குமுறை பழகிய என் கைவிரலோ
உனக்கு துரோகம் எழுதியது வரலாறு!
எனக்கெதிராய் போராட மனமில்லையா
பொருமையாய் கிடந்தது ஏன் கூறு!
உன் ஆயுல நான் தினம் சுரண்டி
சுயநலமாய் இருந்தேனே
கழுத்தை இறுக்கப்பிடித்து எழுதியபோதும்
உயிர் மூச்சை எனக்காய் தந்தாயே
அடக்கம் செய்ய அலைகிறேன்
வெட்டியானே ஓடி வா
உனக்கு இரங்கல் எழுத அலைகிறேன்
எனக்கு இன்னொரு பேனா கிடைக்குமா?
No comments:
Post a Comment