Search This Blog

Showing posts with label வெறுத்தாலும். Show all posts
Showing posts with label வெறுத்தாலும். Show all posts

Thursday, 14 December 2017

உணர்ந்தேன்

ஓவியத்தில் வாசம் உணர்ந்தேன்
உன்னை வரையும் முன்னே
காவியத்தில் இடம் பிடித்தேன்
உன்னில் என்னை இழந்த பின்னே

என் தேவைகளும் தேவையில்லை
உன்னை நான் தொடர்ந்தால்-இனி
காலங்களும் என் கையில் இல்லை
உன் கரங்களை தொழுதால்

சேமிக்க ஆசையுண்டு
உன் நினைவுகளலானால் மட்டும்
யுகங்கள் பல கடந்தாலும்
சுகமாய் உன்னை தொடர்ந்திடுவேன்

நிஜத்தில் நீ வெறுத்தாலும்
நினைவில் தினம் அனைத்திடுவேன்
நெருப்பாக பார்த்தாலும்
வெந்தாலும் உன்னோடு வந்திடுவேன்

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...