Search This Blog

Monday, 3 August 2020

பகலிரவு

          பகலிரவு

 

பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை

தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு?

அரைநாள் கூடத் தாங்கவில்லை

இப்படி உங்களில் யுத்தமெதற்க்கு?

 

கதிர் கொண்ட பகலவனே

மதிகொண்ட அவளை கடிந்துகொண்டதேன்?

பெரும் மடிகொண்ட கதிரவளே

அவனை கண்டதும் வெட்கங்களை விலக்குவதேன்?

 

உங்களாட்சியில் மாந்தர்கள் கோடி

அவர்களை உங்கள் வசப்படுத்துங்கள்

இருவரும் ஓர் நாள் ஒன்றாய் பேசி

மீண்டும் மனம் திரும்புங்கள்

 

இரவோ பகலோ முடிவுகட்டி

இன்னும் முழுதாய் வாழுங்கள்

முட்டி மோதி காதலை தொடர்ந்தால்

வாழ உங்களை மேலும் நெறிபடுத்துங்கள்

Wednesday, 22 July 2020

அவளும் நானும்

நிலவுக்கும் எனக்கும் பல்லாயிரம் மைல்கள் இருக்கும், 
நிலவொளி மட்டுமே என்னோடு
பரவாயில்லை நான் உயிருடன் நடமாடிக்கொண்டிருப்பேன்...

காலம் இப்படியே நீளுமென்றால், 
இரவு பகலாக ஒளியாதே
குருடனுக்கு விழியிருந்தும் பார்வையில்லை, 
நீ இருந்தும் இல்லாததைப் போல..


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Thursday, 9 July 2020

பிளாஸ்டிக் குப்பைகள்

       பிளாஸ்டிக் குப்பைகள்

 

அரசாங்கம் வேண்டாமென்றும்

கள்ளத்தனமாய் நான் பிறந்தேன்

கருனையில்லா கடைக்காரர்களாலே

குழந்தை தொழிலாளியாய் பொதி சுமந்தேன்

 

மெல்லிய என் தேகம் கிழித்து

விலைமாதைப் போல் வீசப்பட்டேன்

காற்றும் என்னை கருனையின்றி அடிக்க

பல மயில்கள் துரத்தப்பட்டேன்

 

நேற்று விழுந்த மழைத்துளியை

என் மேலே தாங்கிக்கொண்டேன்

புதிதாய் வந்த நட்டுறவின்

காதலை நான் ஏந்திக்கொண்டேன்

 

பிய்ந்த குச்சித் தலையன் என்னை

தரையோடு அள்ளிக்கொண்டான்

தொட்டியிலே என்னைக் கொட்டி

உறவுகளை குப்பையாய் என்னுடன் சேர்த்தான் 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Friday, 3 July 2020

பெண்மையில்

நெஞ்சதனை கருவரையாய் சுமக்கும்

ஆணெல்லாம் பெண்ணாகிறான்

ஆண்மையினை தோற்கடிக்கும்

பெண்ணெல்லாம் ஆணாகிறாள்

 

களவு பரம்பரை தொழிலாக்கி

கனம் என்னை களவாடினாள்

பட்டினியாய் எனை போட்டு

என் தாபத்தை விருந்தாக்கினாள்

 

தொடர்கதையாய் அவள் நினைவை

தினம் என்னில் பழக்கினாள்

தொடரும் என சொல்விடுத்து

முடியாத் தொடராய் கதை நீட்டினாள்

 

செக்கு மாட்டு கணக்காக

என்னை தினம் சுழட்டினாள்

சாட்டையிலே அடித்துவிட்டு

என் தலையை கோதினாள்.


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Wednesday, 1 July 2020

கைதி

சிறையில்லா கைதி நான்

அவள் கண்களாலே! 

சிறகிருந்தும் பறக்கவில்லை

ஆயுள் கைதியானேன்! 

 

என் குற்றம் காதலது

ஒருதலையாய் மட்டும்! 

அதற்கான தண்டனை தான்

ஒருவேளை உணவு மட்டும்! 

 

கல்லுடைக்கும் வேலையில்லை

காற்றில் கைநீட்டி திரிகிறேன்! 

தினம் அவள் வருகையை மட்டும்

கம்பியை போல என்னுகிறேன்! 

 

அவள் நினைவை மின் வேலியாய்

என்னை சுற்றிப் போட்டு வைத்தாள்! 

வேறு யாரும் வாராமல், உள்ளே

என்னை தனியாக பூட்டி வைத்தாள்! 

 

<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Tuesday, 30 June 2020

அவள் நினைவுகள்

நினைவுகளே தாக்காதே!

 கண்ணில்

பத்து விரலை பாய்ச்சாதே

தனிமையிலே பேசாதே! 

தனியாய்

தவிக்கவிட்டுப் போகாதே

 

என் இளஞ்சூட்டு ரத்தமதை

செடி வேர்களில் ஊற்றாதே

காயம் பட்டு கருகி விடும்

கருனையை எதிர்பார்க்காதே

 

வலியதனை சொல்லி அழ

வார்த்தைகளே போதாது

வானம் போல கண்ணீர் விட்டேன்

வாய்க்கால் கரையும் தீராது

 

தேசம் தாண்டி பாசம் வைக்க

தூரம் என்ன தடையாகுமா? 

நீ என்னை விட்டு விலகியிருந்தால்

உன் மேல் என் காதல் குறையுமா? 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

Monday, 29 June 2020

கட்டளை

பூக்களே இனி பூக்காதீர்கள்

அவள் துயில் நீங்கும் வரை! 

விடிந்ததும் வரும் திருடன் பனியே

இனி வராதே இது உன் பணியே! 

 

அடுக்காய் இலைவிரித்த அருகம்புல்லே

மேலும் உயர கட்டிட எழுப்பு, 

அவள் பாதம் அதில் பவனி வரும்

பட்டுப்புழுக்களை குடியமர்த்து! 

 

பசுவினை தினம் அழைத்து 

பாலாற்று மணலை பிழிந்தெடுத்து

பாலேடை அதில் கடைந்தெடுத்து

தினம் அவளிதழ்கள் பருக அனுப்பு! 

 

வானவில்லை வரவழைத்து

வெள்ளாவியில் வெளுத்தனுப்பு! 

கண்ணாடிகள் வெட்கப்படும்

அதன் புகைப்படங்களை எனக்கனுப்பு! 


<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...