Search This Blog

Thursday, 14 December 2017

என் ஜனனம்

ஓடாத நதியில் மீனாய் பிறந்தேன்
கூடாத கடலில் தான் சேர்ந்தேன்
தேனமுதை தெகட்ட உட்கொண்டு உறவாடி
கிழிந்த வலையில் சிக்கிக்கொண்டேன்
இளந்தென்றலை என்னுள்ளே இழுத்துவிட்டு
தரை மேல் தாண்டவம் நான் புரிந்தேன்
தங்க அளந்த தராசில் விலையாகி
உடைந்த கத்தியில் சிறு துண்டானேன்
உலையில் நானும் பலவாய் நீந்தி
செதிலிழந்து செதில் செதிலாய்
சட்டிக்குள்ளே மிதந்தேன்
சாவை நானும் வென்றேன்
அகப்பையில் மெல்ல படியெடுத்து
அவள் உள்ளங்கையில் கடைந்தெடுத்து
எனக்கு ஜனனம் தருகிறாள்
அவள் உள்ளத்தில் மோட்சம் காண்கிறேன்

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...