ஒரு நிமிடம்
அன்பே என் கண்களை கவனி
கண்ணாடியின் தேவையிருக்காது
என் இதயத்துடிப்பை உற்று நோக்கு
நொடிக்கு நூறு பெயரில் உன்னை அழைக்கிறது
கையை காற்றில் நீட்டி கேளேன்
என் மூச்சுக்காற்றின் சூட்டை கூறும்
வெறுங்காலில் மண்ணில் கோலமிட்டு பாரேன்
என் நரம்பின் அதிர்வுகள் புரியும்
தபால் பெட்டியிடம் கேட்டுப்பார்
முத்திரைக்கு கண் மையை கடனாய் கேட்கும்
உன்னையெழுதிய இலக்கண தாள்களை புரட்டிப்பார்
என்னி முடிக்க காற்றின் ஆயுள் குறைந்துபோகும்
என் கோரிக்கைகளை மனுக்களாய் எழுதி
ஆகாயத்தை உரையாய் மடித்தேன்
விடியும் முன்னமே படித்துவிடு
வெண் திருடன் வருவான் படித்ததும் எரித்துவிடு
கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
No comments:
Post a Comment