Search This Blog

Saturday, 27 June 2020

ஒரு நிமிடம்

         ஒரு நிமிடம்

 

அன்பே என் கண்களை கவனி

கண்ணாடியின் தேவையிருக்காது

என் இதயத்துடிப்பை உற்று நோக்கு

நொடிக்கு நூறு பெயரில் உன்னை அழைக்கிறது

 

கையை காற்றில் நீட்டி கேளேன்

என் மூச்சுக்காற்றின் சூட்டை கூறும்

வெறுங்காலில் மண்ணில் கோலமிட்டு பாரேன்

என் நரம்பின் அதிர்வுகள் புரியும்

 

தபால் பெட்டியிடம் கேட்டுப்பார்

முத்திரைக்கு கண் மையை கடனாய் கேட்கும்

உன்னையெழுதிய இலக்கண தாள்களை புரட்டிப்பார்

என்னி முடிக்க காற்றின் ஆயுள் குறைந்துபோகும்

 

என் கோரிக்கைகளை மனுக்களாய் எழுதி

ஆகாயத்தை உரையாய் மடித்தேன்

விடியும் முன்னமே படித்துவிடு

வெண் திருடன் வருவான் படித்ததும் எரித்துவிடு

 

 

கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..

 

 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...