Search This Blog

Saturday, 27 June 2020

எருக்கம் காதல்

     எருக்கம் காதல்

 

முத்துக்களாய் மூடி வைத்து

முதிர்ந்த பித்துக்களால் உடைத்த என்னை

காற்றாய் கரம் கொண்டு

இமயத்தை காண வைத்தது காதல்

 

கால் நோக திரிய வேண்டாம்

கனல் நீர் மேலே புரளவேண்டாம்

தரை மீது உன் தலைமுறையிருக்கு

தயங்காமல் மண் நெஞ்சில் மூடியது காதல்

 

மண்ணில் மறைந்த என்னை காணாது

விண்ணில் வீட்டை விட்டு வெளிவந்து

உள்ளே உறைந்த ஊமையென்னை

மெல்ல முளைய வைத்தது காதல்

 

ஆளாகி நின்றபோது

சொந்தங்கள் எல்லாம் தனிமரமாக

தனியாய் பூத்த என் சோலையிலே

வண்டொன்றின் ரீங்கார தாலாட்டு காதல் 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...