எருக்கம் காதல்
முத்துக்களாய் மூடி வைத்து
முதிர்ந்த பித்துக்களால் உடைத்த என்னை
காற்றாய் கரம் கொண்டு
இமயத்தை காண வைத்தது காதல்
கால் நோக திரிய வேண்டாம்
கனல் நீர் மேலே புரளவேண்டாம்
தரை மீது உன் தலைமுறையிருக்கு
தயங்காமல் மண் நெஞ்சில் மூடியது காதல்
மண்ணில் மறைந்த என்னை காணாது
விண்ணில் வீட்டை விட்டு வெளிவந்து
உள்ளே உறைந்த ஊமையென்னை
மெல்ல முளைய வைத்தது காதல்
ஆளாகி நின்றபோது
சொந்தங்கள் எல்லாம் தனிமரமாக
தனியாய் பூத்த என் சோலையிலே
வண்டொன்றின் ரீங்கார தாலாட்டு காதல்
No comments:
Post a Comment