சிறையில்லா கைதி நான்
அவள் கண்களாலே!
சிறகிருந்தும் பறக்கவில்லை
ஆயுள் கைதியானேன்!
என் குற்றம் காதலது
ஒருதலையாய் மட்டும்!
அதற்கான தண்டனை தான்
ஒருவேளை உணவு மட்டும்!
கல்லுடைக்கும் வேலையில்லை
காற்றில் கைநீட்டி திரிகிறேன்!
தினம் அவள் வருகையை மட்டும்
கம்பியை போல என்னுகிறேன்!
அவள் நினைவை மின் வேலியாய்
என்னை சுற்றிப் போட்டு வைத்தாள்!
வேறு யாரும் வாராமல், உள்ளே
என்னை தனியாக பூட்டி வைத்தாள்!
No comments:
Post a Comment