நெஞ்சதனை கருவரையாய் சுமக்கும்
ஆணெல்லாம் பெண்ணாகிறான்
ஆண்மையினை தோற்கடிக்கும்
பெண்ணெல்லாம் ஆணாகிறாள்
களவு பரம்பரை தொழிலாக்கி
கனம் என்னை களவாடினாள்
பட்டினியாய் எனை போட்டு
என் தாபத்தை விருந்தாக்கினாள்
தொடர்கதையாய் அவள் நினைவை
தினம் என்னில் பழக்கினாள்
தொடரும் என சொல்விடுத்து
முடியாத் தொடராய் கதை நீட்டினாள்
செக்கு மாட்டு கணக்காக
என்னை தினம் சுழட்டினாள்
சாட்டையிலே அடித்துவிட்டு
என் தலையை கோதினாள்.<script data-ad-client="ca-pub-4828673630536884" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
No comments:
Post a Comment