உன் கைபிடித்து நெடுந்தூரம் நடக்க வேண்டும்
நடக்கும் நேரமெல்லாம் நிதானமாய் கடக்க வேண்டும்
மேகம் நமக்கு குடைபிடிக்க வேண்டும்
இடி மின்னல்கள் இசைக் கச்சேரி நடத்த வேண்டும்
வானவில் வண்ணங்களை நம் மீது தூவ வேண்டும்
நிலா உன்னழகில் மண்ணில் வீழ்ந்து உடைய வேண்டும்
நட்சத்திரம் உன் பெண்மையில் ஒளிர வேண்டும்
சூரியன் உன் மென்மையை கண்டு குளிர வேண்டும்
காலையிலே பூத்த பூக்கள் நீயின்றி வாட வேண்டும்
கிரகங்கள் கிருக்குபிடித்து திசையொன்றாய் போக வேண்டும்
வின்னுக்கும் மண்ணுக்கும் போர் அறிவிக்க வேண்டும்
வில் அம்பு போதாமல் போர் முடிக்க வேண்டும்
உன் உள்ளங்கையில் சூரியனை மூட வேண்டும்
நீ கால் வைக்க பனி பூக்களாய் பூக்க வேண்டும்
அந்த பனிமேலே உன் கால்கள் பட வேண்டும்
உன் பாத சூட்டில் பனியோடு நானும் உருக வேண்டும்
No comments:
Post a Comment