Search This Blog

Saturday, 27 June 2020

கோபம் கொள்ளாதே

              கோபம் கொள்ளாதே

 

 

பெண்ணே உன் கோபத்தை திரட்டி

கழுவில் என்னை ஏற்றாதே

வென்பனி போன்ற உன் வெள்ளைக்கருவில்

எரிமலைக் குழம்பை தெளிக்காதே

 

தென்றலுக்கு கோபம் என்ன புயலாய்

தென்னங்கீற்றைத் தாக்க

புனிதமாய் பருகும் நீர் துளிகளெல்லாம்

வெள்ளமாய் திரள்கிறதே என்னை மூழ்க

 

என் மூளை செய்த தவறுக்கெல்லாம்

கைவிரல் தோலை தண்டிக்கிறேன்

விரல்களையெல்லாம் வீரர்களாய் திரட்டி

என் மூளையை வம்புக்கிழுக்கிறேன்

 

அன்னிச்சையாக செய்த தவறுக்கு

நித்தமும் என்னில் வன்முறை

தவறுகளையெல்லாம் உன்னெதிரே நிறுத்தி

கேட்கிறேன், மன்னிப்பாயா இந்த ஓர் முறை 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...