கோபம் கொள்ளாதே
பெண்ணே உன் கோபத்தை திரட்டி
கழுவில் என்னை ஏற்றாதே
வென்பனி போன்ற உன் வெள்ளைக்கருவில்
எரிமலைக் குழம்பை தெளிக்காதே
தென்றலுக்கு கோபம் என்ன புயலாய்
தென்னங்கீற்றைத் தாக்க
புனிதமாய் பருகும் நீர் துளிகளெல்லாம்
வெள்ளமாய் திரள்கிறதே என்னை மூழ்க
என் மூளை செய்த தவறுக்கெல்லாம்
கைவிரல் தோலை தண்டிக்கிறேன்
விரல்களையெல்லாம் வீரர்களாய் திரட்டி
என் மூளையை வம்புக்கிழுக்கிறேன்
அன்னிச்சையாக செய்த தவறுக்கு
நித்தமும் என்னில் வன்முறை
தவறுகளையெல்லாம் உன்னெதிரே நிறுத்தி
கேட்கிறேன், மன்னிப்பாயா இந்த ஓர் முறை
No comments:
Post a Comment