Search This Blog

Saturday, 27 June 2020

பட்ட மரம்

           பட்ட மரம்

 

பிறந்து வளர்ந்த இடத்தில்

வாழ்ந்து முடித்த சோம்பேறியவன்

நிழலினை நீண்ட தூரம்

பயணம் அனுப்பா சுயநலவாதியவன்

 

பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த

பாரியவன்

காய்ந்துப்போன ஒரேயொரு

சோலையவன்

 

ஒற்றைக்காலில் துயில் கொண்ட

கும்பகர்ணன்

கடைசிவரை தன் காதலியை, காட்டாத

பாவியவன்

 

வின் மேலே துள்ளி எழும்பாத

அமரனவன்

மண் மேலே அமைதியாய் அடக்கமான

தவப்புதல்வன்

 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...