நானும் இலவுகாத்த கிளியானேன்
என்னை நீ நினைக்க மறந்தபொழுது
சிரிப்பினில் ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தேன்
என் அழுகையில் உன்னை மட்டுமே உணர்ந்தேன்
பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றினேன்
இலையுள்ள மரங்கள் எல்லாம் எனக்கு இரங்கல் தெரிவித்தது
அரக்கு வைத்து பூட்டிய இதயத்தை
அழுத்திப்பிடிக்கிறேன் அவள் எதிரே வருகிறாள்
தினம் நூறுமுறை அவள் முன்னே நிற்கிறேன்
கணக்கு தெரியாதவளாய் கச்சிதமாய் நடிக்கிறாள்
பெண்ணே உனக்கு தற்காப்பு தேவையில்லை
உன் கண்களே போதுமடி
எங்களின் இடைவெளியே பலநூறு வருடம் பயணிக்கும்
நிலவே நீ எம்மாத்திரம்?
No comments:
Post a Comment