Search This Blog

Thursday, 14 December 2017

ஹைக்கூ

நானும் இலவுகாத்த கிளியானேன்
என்னை நீ நினைக்க மறந்தபொழுது

சிரிப்பினில் ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தேன்
என் அழுகையில் உன்னை மட்டுமே உணர்ந்தேன்

பட்ட மரத்திற்கு தண்ணீர் ஊற்றினேன்
இலையுள்ள மரங்கள் எல்லாம் எனக்கு இரங்கல் தெரிவித்தது

அரக்கு வைத்து பூட்டிய இதயத்தை
அழுத்திப்பிடிக்கிறேன் அவள் எதிரே வருகிறாள்

தினம் நூறுமுறை அவள் முன்னே நிற்கிறேன்
கணக்கு தெரியாதவளாய் கச்சிதமாய் நடிக்கிறாள்

பெண்ணே உனக்கு தற்காப்பு தேவையில்லை
உன் கண்களே போதுமடி

எங்களின் இடைவெளியே பலநூறு வருடம் பயணிக்கும்
நிலவே நீ எம்மாத்திரம்?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...