Search This Blog

Showing posts with label naveenkumar. Show all posts
Showing posts with label naveenkumar. Show all posts

Sunday, 28 June 2020

கூலி தருகிறேன்

       கூலி தருகிறேன்

 

தென்றலே அவள் மூச்சுக் காற்றை

மொத்தமாய் சேகரித்து என்னிடம் கொடு

ஓயாமல் திரியும் உனக்கு

ஓர் நாள் விடுப்பு தருகிறேன்

 

அவளைக் காணாது தினம் தேயும் நிலவே

என் கண்களை பார் அவளைக் கொண்டேன்

இனி தேய்ந்து நீயும் போகாதே

முப்பது நாளும் உனக்கு பௌர்ணமியே

 

பெரும் அலைத் திரைக்கடலே

பொங்காதே சற்று பொறுமை கொள்

புது மோட்சம் தர வந்துவிட்டாள்

இனி உன்னில் உப்பு சப்பில்லாமல் போகும்

 

குமுறும் எரிமலையே உன்மேல் நான்

ஈரத்துணியை போர்த்துகிறேன்

பனிமலையாய் உருகி உருமாறி

பள்ளம் மேட்டில் ஊர்ந்தோடேன்

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...