Search This Blog

Saturday, 27 June 2020

சாலையோர பூக்கள்

        சாலையோர பூக்கள்

 

 

ஒதுக்கி வைத்த பூஞ்சோலையவள்

வாகனங்கள் சென்றால் தலையாட்டுபவள்

வான் மழையை எதிர்பார்ப்பவள்

ஓர் ரசிகனையும் காணதவள்

 

யார் கூந்தலுக்கும் ஏங்காதவள்

களை எடுக்காத கூட்டத்தவள்

வான் பறக்கும் வண்டுகளை

தினம் வாடிக்கையாளராக கொண்டவள்

 

வேருக்கு நீர் குறைந்தாலும்

பூவின் வண்ணத்தில் கஞ்சம் காட்டாதவள்

எந்த அரசியல் தலைனின் தோளிலும்

சேரா தனிக்காட்டு தலைவனவள்

 

கிழவியின் கைப் பின்னல்களுக்கு

அடங்க மறுத்த மெண் போராளியவன்

தாய் வீட்டோடு வாழ்ந்து முடித்து

தன் ஜென்மம் முடித்த கன்னியவள்

 

 

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...