Search This Blog

Saturday, 27 June 2020

பாவையின் பார்வை

முதல் முறை உன்னை கண்டபோது

பார்வையில் என்னை அறைந்துவிட்டாய்

சிவந்த கண்ணங்களை மூடிக்கொண்டேன்

சிரிப்பால் அதற்கு மருந்திட்டாய்

 

என் எதிரே நீ வருகையிலே

இதயத்தின் திசையை திருப்பிவிட்டாய்

என்னை கடந்து செல்லும் வரை

துடிப்பையும் சேர்த்து நிறுத்திவிட்டாய்

 

நீ நெளிந்து நடந்து போகையிலே

அன்னத்தையே மிஞ்சிவிட்டாய்

எனக்கு, அன்னம் தண்ணியும் இறங்கவில்லை

எங்கே நீ நடை பழகிக்கொண்டாய்

 

கால் கொலுசின் ஓசையிலே

மயிலை நீ ஆடவிட்டாய்

மெளனச் சிரிப்பின் ஜதியினிலே

மனதை ஏனடி கொள்ளையிட்டாய்?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...