Search This Blog

Thursday, 22 March 2018

பிறந்தநாள்

           பிறந்தநாள்

சிறைவாச புழுதியோடு,
வாழ்க்கையை நானும் ஓட்டி வந்தேன்
புதிதாய் நானும் பிறந்தவன் போல்
புதுநூல் கோர்த்து தந்தாயே

வாழ்த்துக்கள் ஆயிரம் வந்தபோதும்
உன் வாய்மொழி எனக்கு புது வருடம்
கண்ணசைவில் நீ கூறிய வாழ்த்து
கூடிய என் வயதில் மீட்டெடுத்த இளமையது

என் ஆயுள் நீளும் என்று
இதுவரை நான் நினைக்கவில்லை
உன் நினைவுப்பரிசை ஏந்துகையில்
இனிமேலும் அதை மறுக்கவில்லை

சன்னிதானப் படிகளெல்லாம் சக்தியற்று
உன் சன்னதியில் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்து
என் அடுத்த மூப்பைத் தேடி, தினம்
பன்னிரெண்டு மாதங்களை விரட்டுகிறேன்!

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...