Search This Blog

Wednesday, 21 March 2018

நீ பேசாத நாட்கள்

         நீ பேசாத நாட்கள்

ஓர் இரவு நீ பேசவில்லை
பூச்சி புழுவை கூட்டி ஒப்பாரி வைத்தேன்
கண்ணில் ததும்ப ததும்ப நீர் ஒழுக
மொத்தமாய் காவிரிக்கு திருப்பிவிட்டேன்

என் தோள்மீது சாய்வேன் என்று
சொன்னதெல்லாம் பொய்யோ என்றேன்
மாமா உன தோள் மீது
சாஞ்சிக்கிறேன்னு மறுநாள் வந்தியே

தீப்பந்தம் நான் கொளுத்தி உனக்காக காத்திருக்க
மனசக்குள்ளே கதவ தட்டும் சத்தம்
யாருன்னு எட்டி பார்க்க
இதயத்தோடு பேசலான்னு என்னை கூட்டி போனியே

இரவு முழுக்க நாம் பேச
எழுத்து காலி ஆகுமுன்னு
கலியுலக காலத்திலும் எனக்கு
கடிதம் எழுதி போட்டாயே

பல இரவு போயிடுச்சி
இன்னும் நாமும் பேசவில்லை
ஒப்பாரி வைக்க ஆளில்லை
சகியே, தனியே நான் என்ன செய்ய?

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...