Search This Blog

Tuesday, 6 February 2018

எனக்கு முன்

          எனக்கு முன்

என் உயிரை காற்றாய் திரித்து
உன் முகவரியை தேடினேனே
தென்றல் முன்னே முந்தியபடி
புயல் என்னை பின்னே தள்ளுறானே

சங்கிலியால் விளங்கு பூட்டி
திருவிழா தேராக வாரேனே
என் முன்னே சாமி முந்தி
உன்னை கைகூப்பி தொழுதானே

உன் கண்ணத்தில் நான் சேர
நீரில் தூறலாய் சேர்ந்தேனே
என்னை வாளியிலே மொண்டெடுத்து
வாசலில் நீ தெளிக்க உயிரின்றி வீழ்ந்தேனே

கோவில் புறா காலிலெல்லாம்
காதல் கடிதம் வரைந்தேனே
வழிப்பறியாய் அவைகள் மாறி
கடிதம் திருட வியந்தேனே

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...