Search This Blog

Sunday, 21 January 2018

நானும் என் மனதும்

என் மனதில் புதிதாய் கட்டிய பாலம் நீ
உன் நினைவு வந்தால் உடைகிறேன்
நினைப்பு வரவில்லையெனில் உடைத்து
மீண்டும் அதை நானே புதுப்பிக்கிறேன்

இளங்காற்றிலே பஞ்சைப் போல பறக்கிறேன்
உன் உள்ளங்கையில் படுவேனா
நீ ஊதும் மூச்சுக்காற்றில் மேலே பறந்து
ஆகாயத்தில் நூறு முறை பிறப்பேனா

உறையில் வைக்க நேரமில்லாமல்
தனிமை என்னோடு வாள் பிடித்ததே
உன் விழியசைவில் தான் அது நொறுங்கி
என் இதயத்தை உரையாக்கியதே

உன் நெடுந்தூர காலடிப் பயணத்தில்
என் பாதம் துறவியாய் போகுது
சுங்கவரி கேட்டாலும் என் வரியை தருகிறேன்
உன் உள்ளங்கையில் என் பெயரெழுதடி பெண்ணே

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...