Search This Blog

Thursday, 28 December 2017

உன்னாலே

ஜாமத்தில் விழிக்கிறேன் -உன்
நினைவு வந்தால் சிரிக்கிறேன்
சோகத்தில் வீழ்கிறேன்
சாகவில்லை மீள்கிறேன்

தலையாட்டி பொம்மையில்லை-நான்
தானாய் அசைகிறேன்
வேடிக்கை பார்க்கிறேன் என்னுள்
விருந்திரனாய் நீ வந்தால்

சக்ரமாய் சுழன்றபோதும்-இங்கே
என்னில் மயக்கமில்லை
பார்வையிலே நீ அடித்த போது
சத்தியமாய் நான் எந்திரிக்கவில்லை

சுடுபட்ட களிமண்ணாயினும்-உன்
சுய உருவம் நான் வடிப்பேன்
சுழலாமல் இப்பூமியிருந்தால்
உன்னைக் காட்டி சுழலவைப்பேன்.

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...