நான் வரைந்த திமிர்
தூயப் பசும்பாலிலே தூரிகைக் கொண்டு
இமைக்காமல் உன் கண்களை செய்தேன்
கருமேகங்களை சுண்டக் காய்ச்சி
உன் விழிகளுக்கு கருமை தந்தேன்
வானவில்லை கசக்கி பிழிந்து
பல வண்ண ஆடை தைத்தேன்
மண் மலைகளெல்லாம் குடைந்தெடுத்து
தங்கத் தோடை கையில் கொண்டேன்
புன்னகையிலே புது பூக்கள் சேர்த்து
புதுச்செடியாய் நெஞ்சில் நட்டு வைத்தேன்
பூத்த நேரம் தட்டான் பூச்சி வர
ஓடியோடி அதை விரட்டிவிட்டேன்
காளை திமிலைப்போல் உன் திமிரையெல்லாம்
எனக்குள்ளே கொட்டி குவித்து வைத்தேன்
அன்பாலே அடக்க என்னி அந்தரத்தில் வீழ்ந்துவிட்டேன்
திமிர் பிடித்த அழகின் அழகியோ நீ?
No comments:
Post a Comment