Search This Blog

Thursday, 14 December 2017

கொஞ்சம் பொறு

சிலந்தியே கொஞ்சம் பொறு
வேகமாய் நூற்காதே
பட்டுப்புழுவே சற்று வேகமெடு
கூட உனக்கு கூலி தரேன்
தூக்கணாங் குருவியே 
கூட்டை சீக்கிரம் நெய்து முடி
இரவு நேரத் தென்றலே
பனிக்காற்றை வாங்கி வா
சந்திரனே சீக்கிரம் வா
நீயின்றி அவள் உறங்கமாட்டாள்
அதிகாலை பூபாளமே
அவள் கணவில் நான் வருவேன்
அரைநாள் உனக்கு விடுப்பு தரேன்
அவள் துயிலெழும் வரையில் எழாதே!

No comments:

Post a Comment

பகலிரவு

          பகலிரவு   பகலிரவு காதலர்களே உங்களுக்குள் என்ன சண்டை தினமும் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு? அரைநாள் கூடத் தாங்கவில்லை இப்படி உங்களில்...